March 15, 2013

விடுமுறை காலங்கள் வாலிபர்க்களின் முறைகளும்!



இன்று பள்ளியில் படிக்கும் சமயத்தில் பள்ளி படிப்பை முடிப்பதற்க்கு முன்பு பின்பும் சில வாலிப ஆண்களும் சில வாலிப பெண்களும் சேர்ந்து கொண்டு டூர் என்ற பெயரில் வெளியூர் செல்கிறார்கள் இதனால் ஒழுக்க சீர் கெடுகள் நடைபெறுகிறது மேலும் ஆண் பெண் கலப்படம் ஏற்படுகிறது மேலும் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறார்கள்.அப்படி செல்வதால் எத்தனையோ பெண்கள் தவறான செயலுக்கு நிற்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் நாம் நினைக்கிறோம் டூர் சென்று பல இடங்களைப் பார்த்து தனது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பெற்றோர்களும் கல்வி நிறுவனஙக்ளும் இதற்க்காக முயற்ச்சி செய்கிறார்கள் ஆனால் இந்த டூர் சென்று தனது அறிவை வளர்த்தவர்கள் எத்தனை நபர்கள்தனது வாழ்க்கை பறிகொடுத்தவர்கள் எத்தனை நபர்கள். டூர் என்ற பெயரில் வெளியூர் சென்று சாப்பிடும் முறை முஸ்லீம் முறைப்படியாமேலும் டூர் என்ற பெயரில்.
வெளியூர் சென்று ஆண்,பெண் செல்லும் சமயத்தில் சில இடங்களில் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு குளிக்கிறார்கள் இதனால் ஒரு பெண்ணுடைய மானம் பறி போகிறது நம்முடைய வயது வந்த மகள் மகன் குளிப்பதை நாம் பார்க்க நம்முடைய மனம் ஏற்றுக்கொள்ளுமாசிந்தியுங்கள்! பெற்றோர்களே நம்முடைய மகள் மகள் குளிப்பதையும் மற்ற ஆண் பெண்கள் ரசிக்கிறார்கள் நம்முடைய மகளை நாம் பல வருடங்களாக பாதுகாத்து வருகிறோம் ஆனால்  டூர் என்ற பெயரில் சில நாட்களில் தனது மாணத்தை பறிகொடுத்து

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு




சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன..
கணினி மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வு மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5 உறுப்புகள் மாற்றப்பட்ட அரேபிய பெண்ணுக்கு குழந்தை !!



கத்தார் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அல் அன்சாரி(வயது 26) என்ற பெண்ணுக்கு 2007ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது குடல் பகுதிக்கு செல்லும் முக்கிய நரம்பில் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக அமெரிக்காவின் மியாமி நகரத்தில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு கல்லீரல், கணையம், வயிறு, சிறு மற்றும் பெருங்குடல் ஆகிய ஐந்து உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அதே மருத்துவமனையில், அவருக்கு பெப்ரவரி 26ம் திகதி சிசேரியன் மூலம் பெண்குழந்தை பிறந்தது.

ரயில்வேதுறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருவது வருடம் பின்தங்கிய தமிழகம்




கடந்த இருபது வருடங்களாக ரயில் பட்ஜெட்டில் கேரளம் ஜொலித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின்தங்கி காணப்படுகிறதுது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில்வழி தடங்களை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டது தெற்கு ரயில்வே மண்டலம் ஆகும்.

அமெரிக்க இராணுவ அத்துமீறல்களை விக்கிலீசுக்கு அளித்த வீரரின் வாக்குமூலம் வெளியீடு !!



விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்க ரகசியங்களை அளித்த இராணுவ வீரரின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய தகவல் அளித்தார்.
அமெரிக்க இராணுவம், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ மற்றும் பல்வேறு ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு மேன்னிங் அளித்துள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

March 14, 2013

மேலப்பாளையத்தில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம்



    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வைத்து 16.03.2013 அன்று இஸ்லாத்தை பரப்புவோம் ! மனித நேயம் காப்போம் என்ற தலைப்பில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது இந்த பொதுக்கூட்டத்திற்கு பாபர் மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய பின்பு தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்ற பல்பீர் சிங் என்ற முஹம்மத் அமீர் மற்றும் உத்தரபிரதேஷ்சை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்திக்கு அழைத்து வந்த முஹமது கலிம் சித்தீக் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்

பாலபாரதி MLAத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது. அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.



சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்

இரோம் ஷர்மிளா விடுதலை: உண்ணாவிரதம் தொடருகிறது!



Court orders social activist Irom Sharmila's release
இம்பால்:மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளா, முதல் வகுப்பு ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் படி விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ஆனால், விடுதலையான பிறகு ஷர்மிளா ‘ஷேவ் ஷர்மிளா’ அலுவலகத்திற்கு சென்று உண்ணாவிரதத்தை தொடருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் சிறுவன் அடித்துக் கொலை! குற்றவாளிகளை தப்பவிட்ட போலீஸ்!




Assam Boy killed
கோல்பாரா:அஸ்ஸாமில் அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு சிறுவனை அடித்துக் கொன்றனர். இச்சம்பத்தைக் கண்டித்து போலீஸ் அதிகாரியை மக்கள் சிறைப் பிடித்தனர்.
அஸ்ஸாமின் மொய்லாபத்தர் பகுதியில் இருந்து இரண்டு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் துப்டோலா மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்தனர். அஜிபோர் அலி(15) என்ற சிறுவனை அந்த நபர்கள் அடித்துக் கொன்றனர். மற்றொரு சிறுவனைத் தாக்கி,

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:ராஜேந்தர் சவுதரியிடம் என்.ஐ.ஏ மூன்றாவது நாளாக விசாரணை!




Rajender Chaudhary
ஹைதராபாத்:2007-ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரியிடம் 3-வது நாளாக தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியது.

புதிய போப்: தீர்மானம் ஏற்படவில்லை - கான்க்ளேவ் இன்றும் தொடரும்!



வாடிகன்: சர்வதேச கத்தோலிக்க சபையின் ஆன்மீக தலைவரான போப் ஆண்டவரை தேர்வுச் செய்யும் நடைமுறையான கான்க்ளேவின்(இரகசியக் கூட்டம்) முதல் நாள் வாக்கெடுப்பில் போப் ஆண்டவரை தேர்வுச் செய்யமுடியவில்லை. சிஸ்டெய்ன் சாப்பலின் புகைபோக்கியில் இருந்து வெளியாகும் கறுப்பு புகைதான் முதல் முடிவாக வெளிவந்தது. இதன் பொருள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதாகும். வாக்கெடுப்பு இன்றும் தொடருகிறது. மதியத்திற்கு முன்பு இரண்டு முறையும், மதியத்திற்கு பிறகு இரண்டு முறையும் வாக்கெடுப்பு நடக்கும். கர்தினால்களைப் பொறுத்தவரை 60 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 21 பேர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தென் அமெரிக்காவில் 19 கர்தினால்களும், வட அமெரிக்காவில் 14 கர்தினல்களும், ஆப்பிரிக்காவில் 11 கர்தினால்களும், ஆசியாவில் 10 கர்தினால்களும், ஆஸ்திரேலியாவில் 1 கர்தினாலும் இந்த தேர்வில் பங்கேற்றுள்ளார்கள்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேற ஆப்கான் கிராம மக்கள் கோரிக்கை!



காபூல்: உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேறவேண்டும் என்று ஆப்கானின் வர்தக் மாகாணத்தில் உள்ள மைதான் ஷாஹர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பாவி மக்களை கூட்டாக கைதுச் செய்து பல மாதங்கள் சித்திரவதைச் செய்யும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு ஆப்கான் ராணுவமும் உதவிச் செய்வதாக இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு தீவிரமடைந்துள்ள மாகாணங்களில் இருந்து அமெரிக்க
படையினர் வெளியேறவேண்டும் என்று 2 தினங்களுக்கு முன்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

! டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் பெயரை ரெயிலுக்கு வைக்க முடிவு !



புதுடெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், 23 வயது கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு, தாக்கப்பட்டு, கெடுத்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் சிங்கப்பூரில் இறந்துபோனார். 

March 12, 2013

மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்



இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.

ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?

இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடலாமா?




மார்ச் 24: தமிழர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்த தேவையான அனைத்து காரணிகளும் இப்பொழுது நடந்தேறி கொண்டிருகின்றன. இந்தியா என்கிற ஒரு நாட்டோடு நாம் சேர்ந்திருக்க வேண்டுமா என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஏற்பட தொடங்கி உள்ளது. 

     தமிழர்களுக்கு எதிரான நிலை:தமிழக மீனவர்கள் பல்லாயிர கணக்கில் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதை (மத்திய) இந்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. கூடங்குளம் அணு உலை முதல் காவேரி பிரச்சனை வரை இந்தியா தொடர்ந்துதமிழர்களுக்கு எதிரான நிலையையே கடைப்பிடித்து வருகிறது. 

உடுப்பி கிறிஸ்தவ வழிப்பாட்டுத்தலம் மீது பஜ்ரங்தள் தீவிரவாதிகள் தாக்குதல் !



பெங்களூர்: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டுத்தலம் மீது பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. மதமாற்ற பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள

டி.ஆர்.டி.ஓவில் மீண்டும் இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை சேர்க்கக் கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் இன்று பேரணி!



புதுடெல்லி:பத்திரிகையாளர் உள்ளிட்ட சமுதாயத்தின் பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக வழக்கை ஜோடித்து அநியாயமாக கைது செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச் செயலாளர் சி.ஏ.ரவூஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் நீதியின் புதிய சூரியன் உதித்ததாக யாரும் கருதவேண்டாம்!- மகளின் திருமண உரையில் அப்துல் நாஸர் மஃதனி!



கொல்லம்:ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.