ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்குறைப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிரீஸ் போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் அரசு திணறி வருகிறது. தற்போதுள்ள சூழலில் நோபல் பரிசுக்கான, 6.4 கோடி ரூபாய் தொகை அளிக்க வேண்டுமா என்பது குறித்து, நோபல் பரிசு கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது. எனவே, தற்போதைய பரிசு தொகையில், 20 சதவீதத்தை குறைக்க இந்த கமிட்டி திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment