தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்தியாவில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 18–வது சுற்றின் 2–வது தவணை முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கமானது போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.