February 22, 2013

தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம்!




தஞ்சை மாவட்டத்தில் 2–ம் கட்டமாக 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்தியாவில் கடந்த 1995–ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 18–வது சுற்றின் 2–வது தவணை முகாம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இந்த முகாமின் நோக்கமானது போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதாகும்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: குஜராத் IPS அதிகாரி சிங்கால் கைது!




CBI arrests Gujarat police officer in Ishrat Jahan fake encounter case
அகமதாபாத்:மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான், ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை குஜராத்தின் அஹமதாபாதில், கடந்த 2004ல் “போலி” என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த வழக்கில், குஜராத்தின் “கிரைம் ரெக்கார்ட் பீரோ”வின் எஸ்.பி.யான, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

மெக்கா மஜ்ஸித் போல ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு ?



ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

முஹம்மது நபி, அம்பேத்கார், காந்தி ஆகியோரின் மதுவுக்கு எதிரான கருத்துக்களை பொதுமக்களிடம் சேர்க்கிற டெலிவரிபாய் நான் - வைகோ !!




மதுவிலக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முஹம்மது நபி, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் செய்திகளை விநியோகிக்கும் சிறுவனாகவே தான் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். கடந்த 18ம் தேதி முதல் மதுவிலக்கை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ  நேற்று காலை

February 21, 2013

கஷ்மீர்:போலீசுக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம்!




ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஒன்றை நிறுவியுள்ளது.இது ஆறு மாதத்திற்குள் அமலுக்கு வரும்.ஸ்டேட்ஸ் போலீஸ் கம்ப்ளய்ண்ட் அதாரிட்டி(எஸ்.பி.சி.எ)
என்பது அதன் பெயராகும்.
எஸ்.பி.சி.ஐயின் மாவட்ட கிளைகளும் நிறுவப்படும்.போலீசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் கஸ்டடி மரணங்கள் குறித்து ஆணையம் விசாரிக்கும். பிப்ரவரி 28-ஆம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத்தில் இதுத் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும்.உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இதன் தலைவராக இருப்பார்.

தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு தொடக்கம்



தஞ்சை மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமத்தை தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு

தஞ்சையில், ஆள்கடத்தல் மற்றும் சிறுவர்கள் மீதான பிரச்சினைகளை விசாரிக்க ‘‘ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இளஞ்சிறார் சிறப்பு காவல் குழுமம்’’ என்ற தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்று தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜெயராம் உத்தரவிட்டார்.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கம் திறப்பு விழா



காதிர் முகைதீன் கல்லூரியில் புதுபிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கத்தின் திறப்பு விழா இன்று காலையில் மிக சிறப்பான முறையில்  காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஹாஜி.கே.எஸ்.சர்புதீன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது . இவ் விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர் ஏ.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுபினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ .ஜலால் ,முனைவர்.ஏ .எம் .உதுமான் முகைதீன் , பேராசிரிய, பேராசிரியைகள் ,அலுவலக மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" மாபெரும் கருத்தரங்கம் !!



சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை" கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் பாண்டியனில் வைத்து பிப்ரவரி 20 அன்று மாலை 6:45 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது. மாநிலத் துணைத்தலைவர் எம். சேக் முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஊழல் நடப்பதை தடுக்க என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை ! : பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி !!



புதுடெல்லி: ‘‘பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை தடுக்க, என்ன செய்வது என்றே தெரியவில்லை.’’ என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.

மோடிக்கு விசா அனுமதி இல்லை ! – அமெரிக்கா !



புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு ஏற்படுத்திய விசா தடையில் மாற்றமில்லை என்று அமெரிக்க ஸ்டேட் அஸிஸ்டெண்ட் செகரட்டரி ராபர்ட் ப்ளேக் தெரிவித்துள்ளார் மோடிக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வெளியாகாமல் விசா மறுப்பை தளர்த்தவோ, மாற்றம் ஏற்படுத்தவோ செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்

! சுஷில் குமார் ஷிண்டே பேச்சு காற்றில் போச்சு !



காவித் தீவிரவாதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தனது கருத்தினை                                                                                                                                                                     திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்தால் தான் பாராளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என்று பாரதீய ஜனதா நிபந்தனை விதித்தது. இதையடுத்து ஷிண்டே தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

February 13, 2013

இருதய சிகிச்சை : அதிரை சிறுமிக்கு உதவிடுவீர் [ காணொளி ] !








‘லப் டப்’... ‘லப் டப்’... என்ற ஓசையுடன் கருவில் முதன் முதலாக உருவாகும் இருதயம் துடிப்புடன் இயங்கி மற்ற உறுப்புகளை இயக்கி வரும். இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறிய நேரிட்டால் மருத்துவத்தை உடன் நாடிச்செல்கின்றோம்.

பிப்ரவரி 14 - ஆபாசதினம்!





வ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் அடுத்த நாளைய நாளிதழ்களில் வெளியாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

சட்டவிதிமுறைக்கு முரணாக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்




இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என்ற தீர்ப்பின்படி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குரு எந்த பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அப்சல் குரு தூக்குதண்டனையை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



வழக்கறிஞர் சங்கரசுப்பு  அவர்கள் உரையாற்றிய பொழுது 


2001 டிசம்பர் 13 ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 9.2 .2013 அன்று காலை 8 மணி அளவில்

அப்ஸல் குரு:கலங்க வைத்த கடைசி தருணங்கள் !



அல் ஃபிதா – நான் ‘விடை பெறுகிறேன்’. தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக் கதவுகள் திறக்கப்பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர்.
அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை ஊழியர் சொன்னதாவது: