May 1, 2012

காதிர்முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் சங்க தொடக்கவிழா காட்சிகள்


காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகள் முன்னாள் மாணவ-மாணவிகள் சங்க தொடக்க விழா 29/04/2012 மற்றும் 30/04/2012 காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க துவக்கவிழா 30/04/2012, திங்கட் கிழமை மாலை நடைபெற்றது. 

நிகழ்ச்சி தீனியாத் ஆசிரியர் நஜ்முத்தீன் கராஅத்துடன் துவங்கியது. பள்ளித் தலைமை ஆசிரியயை திருமதி ரோஸம்மா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.


 தாளாலர் ஹாஜி ஜனாப் டாக்டர் அஸ்லம் அவர்கள் பள்ளியின் வரலாறு மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் அத்தியாவசியம் குறித்து விளக்கினார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கத்தை வாழ்த்தி பேசினார்கள்.
காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர். அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.




காதிர் முகைதீன் கல்லூரி பேரா.ஜெயராமன், பேரா.அப்துல்காதர்,பேரா.கணபதி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியில் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மஹபூப் அலி நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியை காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் தொகுத்து வழங்கினார்.










நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

வாவேற்புரை வழங்கிய தலைமை ஆசிரியை திருமதி ரோஸம்மா அவர்கள் பேசும் போது அதிரை எக்ஸ்பிரசில் முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா அழைப்பிதழில் வந்த அனைத்து பின்னூட்டங்களையும் படித்துக் காட்டி  இந்த் சங்கத்திற்கு இருக்கும் ஆதரவை விளக்கினார்கள்.

தாளாலர் டாக்டர் அஸ்லம் அவர்கள் இக்கல்வி நிறுவனத்தின் வளர்சிக்காக நம் முன்னோர்கள், கல்வித்தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். சேக் ஜலாலுதீன் மரைக்காயர், ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார்,ஹாஜி பாட்சா மரைக்காயர் ஆகியோர் பட்ட கஷ்டங்களை எடுத்துரைத்தார்கள்.

பேரா.அப்துல் காதர் அவர்கள் பேசும்போது, இக்கல்வி நிறுவனத்திற்கும் அவருக்கும் ஒரே வயது என கூறியதோடு முதல் முன்னாள் மாணவனாக ரூபாய் 10,000 இந்த முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு நன்கொடை அளித்தார்கள்.

பேரா.ஜெயராமன், பேரா.அப்துல்காதர்,பேரா.கணபதி ஆகியோரும் நன்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும் நன்றியுரை வழங்கிய ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள், ஏற்கனவே முன்னாள் மாணவர் ஒருவர் பள்ளிக்கு இன்வெட்டர் வாங்கிக் கொடுத்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லம் மற்றும் துணைத் தலைவர் திரு பிச்சை மாற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் சேர்க்கை படிவம் பள்ளி தலைமை ஆசிரியையை அனுகினால் கிடைக்கும்.

No comments:

Post a Comment