இதுக்குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த செய்தியில், “எங்கள் முஜாஹிதீன்களில் ஒருவர் ராணுவ தளத்திற்கு முன்னால் காரை வெடிக்கச் செய்தார். மீதமுள்ள முஜாஹிதீன்கள் உள்ளே சண்டையிடுகின்றனர். ராணுவத்திற்கு இந்த தாக்குதல் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. காபூல் முக்கிய விமானநிலையம் அருகே புகை மேலே கிளம்பியதாகவும், இரண்டு பேர் காயமடைந்து, ஒரு பெண்மணிக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதையும் கண்டதாக AFP ஃபோட்டோக்ராபர் கூறுகிறார்.
No comments:
Post a Comment