April 4, 2012


சென்ற மாதம் கடுமையாக உயர்த்தப்பட்ட மின்கட்டணங்களை, சிறிதளவு குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா
மார்ச் 30ம் தேதி தமிழக மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட மின் கட்டண உயர்வு பற்றிய விபரம். 
100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.10 பைசா. 
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.80 பைசா. 
201 யூனிட் முதல் 250 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3 
251 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 பைசா.
500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 75 பைசாவாக உயர்த்தப்பட்டது. 
03 - 04 - 2012 அன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திருத்தியமைக்கப்பட்ட புதிய மின் கட்டண விபரம்.


100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.50 பைசா. 
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படுகிறது.


500  யூனிட்டுகளுக்கு  மேல் உள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த  புதிய மின் கட்டண குறைப்பு வீட்டு மின் பயனீட்டாளர்கள் மட்டுமே பொருந்தும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

No comments:

Post a Comment