January 23, 2013

காவி தீவிரவாதம்: 10 பேரின் பெயரை வெளியிட்டது அரசு




காவி தீவிரவாதம் உண்மைதான்: 10 பேரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு.
  

புது டெல்லி, ஜன. 24 - ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு உள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் தொடர்புடைய 10 பேர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு உள்ளது.
தீவிரவாதம் தொடர்பாக குற்றங்களில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்புகள் உள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஷிண்டே கூறியது சரியானதே. தீவிரவாதத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு தொடர்பு உள்ளது நிஜம்தான் என மத்திய அரசு கூறியுள்ளது.

நீதிபதி சச்சாரின் உயிரை குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதம் - தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி வாக்குமூலம் !!




சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 2006ல் இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்  ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!




திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 

குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் : உள்துறை செயலர் திடுக் தகவல் !!



நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார். 

இதுகுறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங் டெல்லியில் கூறியதாவது:-

January 22, 2013

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் - கமிஷனரை சந்தித்தனர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள்




சென்னை : முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் 22.01.2013 அன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். கமிஷனர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளனர் .

ஹிந்துத்துவா தீவிரவாதத்தை வெளிப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர்: பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!




K. M. Shareef
புதுடெல்லி:ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதத்தை வெளிப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவின் கருத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக இதனை உணர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குண்டுவெடிப்புகள், அரசியல் கொலைகள், வகுப்புவாத கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கும் ஹிந்துத்துவா தீவிரவா அமைப்புகளின் கரம் இருப்பதாக கூறி வந்தன.

ஊழல் வழக்கு: ஹரியானா மாஜி முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை !


ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 2000-ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரானஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா,

உவைசி குடும்பத்தை குறிவைக்கும் கா(வி)ல்துறை : தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் சிறை !


ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி "சார்மினார் ஆக்கிரமிப்பு கோவில்" விஷயத்தில் போராடிய "உவைசி" குடும்பத்தை குறிவைத்து, அக்பருத்தீன் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து, அசதுத்தீன் எம்.பி.யையும் சிறையிலடைத்துள்ளார் கடந்த 2005ம் ஆண்டில் ஹைதராபாத்-மும்பை "NH-9" சாலை விரிவாக்கத்தின்போது, சங்காரெட்டி பள்ளிவாசலை இடிக்க முற்பட்டபோது, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட
நேர்ந்தது அப்போது, அரசு

பல்கேரிய அரசியல் தலைவர் மேடையில் பேசும் பொது தலையில் துப்பாக்கி வைத்து அதிர்ச்சி கொடுத்த பலே ஆசாமி ! (வீடியோ இணைப்பு)


பல்கேரிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். Movement for Rights and Freedoms கட்சித் தலைவரான அகமது டோகனுக்கு கிடைத்த ஓரிரு விநாடிகளை திறமையாக பயன்படுத்தி, தன்னை சுட வந்த நபரை தள்ளி விட்டார். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பல்கேரிய

யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வழிப்பறி : பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றம் !!



ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கடைத்தெரு ஒன்றில் ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். இதே காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. இந்த வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு விசாரணை நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மேலும் இருவருக்கு தலா 74 சவுக்கடியும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களும், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் வானொலி செய்தி வெளியிட்டது. சுமார் 300 பேர் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங் அறிவிப்பு!


புதுடெல்லி:இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார். ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை

படித்தவர்களும் சாதியைப் பார்த்தே வாக்களிக்கின்றனர் – கட்ஜு கவலை!



Markandey Katju

புதுடெல்லி:இந்தியாவில் படித்தவர்கள் கூட சாதியைப் பார்த்தே வாக்களிக்கின்றனர் என்று ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
டெல்லியில் “வோட் ஃபார் இந்தியா’ என்ற வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வாக்களிக்கச் செல்லும்போது,வேட்பாளர்களின் தகுதியை

January 21, 2013

இஸ்லாத்தை தழுவும் தாழ்த்தப்பட்டவர்கள் இனி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !




மதுரை: இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் ஆதி திராவிடர் பிரிவை சேர்ந்தவர்கள். 30 ஆண்டுக்கு முன்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களுக்கு உரிய ஜாதி

January 18, 2013

மாலியில் பிரான்சு ராணுவம் தரை வழி தாக்குதலை துவக்கியது !


பமாகோ:மாலியில் இஸ்லாமிய போராளிகள் மீது பிரான்சு நாட்டு ராணுவம் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. போராளிகள் கைப்பற்றிய தியாபாலி நகரத்தில் உள்நாட்டு ராணுவத்துடன் பிரான்சு ராணுவமும் தரை வழி தாக்குதலை துவக்கியுள்ளது. பிரான்சின் ஏராளமான ராணுவ டாங்குகள் இந்நகரத்திற்கு வந்துள்ளன. தலைநகரில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள தியாபாலியை கடந்த திங்கள்கிழமை போராளிகள் கைப்பற்றினர். போராளிகளின் மையங்களில் நேற்றும் பிரான்சு ராணுவம்

மைனர் குற்றவாளிகளை உருவாக்குகிறதா சமூக வலைதளங்கள்? – கண்காணிக்கும் அரசு!!



கடந்த சில ஆண்டுகளாகவே கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர் என்ற விவரத்தை முன்னரே பார்த்தோம். இந்நிலையில்” ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபட சமூக வலைத் தளங்களும் ஒரு காரணியாக இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல்களை அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில், “சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நான் ரொம்ப பிஸி ! – போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீண்டும் கோர்ட்டில் மனு !!


நில மோசடி வழக்கில் போலீ சார் சரியாக புலன் விசாரணை நடத்தவில்லை. எனவே போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த வாரம் உத்தரவிட்டார். ஆயினும் கமிஷனர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு விலக்கு அளிக்க கோரி கமிஷனர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்க மறுத்து, கமிஷனர் ஆஜராகாமல் இருந்ததற்கு கடும்

தானமாக கிடைத்த இதயங்கள் மருத்துவக் கழிவாகிறது ! – சென்னையில் அவலம்!!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளால் மொத்தம் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகள் பெரும்பாலும்

சுனில் ஜோஷியை கொன்றவர்கள் லோகேஷ் சர்மா, ராஜேந்திர சவுத்ரி – என்.ஐ.ஏ!



புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை மலேகான் – சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் லோகேஷ் சர்மாவும், ராஜேந்திர சவுத்ரியும் கொலை செய்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் மத்தியபிரதேச மாநிலம்

ஆசிரியர் நியமன முறைகேடு அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா மற்றும் 54 பேர் குற்றவாளிகள் !!


ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உட்பட 55 பேரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் சவுதாலா, அவரது மகனும்எம்.எல்.ஏ.வுமான அஜய் சவுதாலா ஆகியோர் உடனடியாக  கைது செய்யப்பட்டனர். தண்டனை விவரம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

முர்ஸி ஆட்சியின் 6 மாதங்கள்:63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியாக உள்ளனர்! - ஆய்வில் தகவல்!


கெய்ரோ: இஃவானுல் முஸ்லிமீனை சார்ந்த டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்து நாட்டின் அதிபராக உள்ளார். இவரது கடந்த 6 மாத கால ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது பஸீரா ஆன்லைன் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 6 சதவீத மக்களின் ஆதரவு முர்ஸியின் அரசுக்கும், முர்ஸிக்கும் அதிகரித்துள்ளது.

January 17, 2013

எல்லையில் போரை தூண்டுவதில் இந்தியா முனைப்பாக இருக்கிறது : பாகிஸ்தான் !!


இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெற்றுவரும் சம்பவங்கள குறித்து, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி தெரிவித்துள்ளார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியதாக  கூறப்படுகிறது  இதனை தொடர்ந்து எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. 

போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா அதிபர் ஆசாத்.. ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு !




டமாஸ்கஸ்: கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சிரிய அதிபர் ஆசாத் பதவி விலகக் கோரி பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவின் உதவியோடு ஆயுத, நிதி உதவி பெற்ற குழுக்கள் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டக்காரர்களுடன் ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், ஆசாத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார்.

January 15, 2013

பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டு போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

பாக் அரசுக்கு எதிராக புரட்சி ! பார்லி முற்றுகைப் போராட்டத்தில் பெரும் வன்முறை!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில்

திரைப்பட தனிக்கைகுழுவை முறைப்படுத்தக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் !!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வருகின்ற ஓராண்டிற்கான பணிகள் தொடர்பான விவாதங்கள் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா வரலாற்றில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாம் மார்க்கத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், முஸ்லிம்களை

பிப்ரவரி 17ம் தேதி "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" !!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 10ம் தேதி மதுரையில் நடைபெற்றது. புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவேயாகும். இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஹில் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்க்கப்பட்ட தினம்

மைக்ரோசாப்ட் தேர்வில் 9 வயது தமிழக சிறுவன் சாதனை !!

மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம்.

3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற 60 வயது அசாமிக்கு மரண தண்டனை: டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

மேற்கு டெல்லியில் உள்ள கபாஷேரா என்ற இடத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி, வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை காணாமல் போனது. இதுபற்றி அவள் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையைத்

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பேஸ்புக் !!


இங்கிலாந்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பேஸ்புக் பயனாளர்கள் தளத்திலிருந்து விலகி வருவதால், பேஸ்புக் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் பயனாளர்களின் சொந்த தகவல்கள் அதிகளவு வேறு பயனாளர்களால் திருடப்படுவதும், பின்னர் அவை வர்த்தக நோக்கில் களவாடப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே தங்களது இரகசிய காப்புரிமை பறிபோவதாக பயனாளர்கள் கருதுவதால், தளத்திலிருந்து விலகுகின்றனர்.

சர்ச்சைக்குரிய உரை:சுவாமி கமலானந்தா கைது!

swami kamalananda
ஹைதராபாத்:முஸ்லிம்களுக்கு எதிராக துவேசத்தை பரப்பும் வகையில் உரை நிகழ்த்திய ஹிந்து சன்னியாசி சுவாமி கமலானந்தா பாரதியை போலீஸ் கைது செய்துள்ளது. விசாரணைக்காக ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்ட கமலானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீஸ் கூறுகிறது. ஹிந்து கோயில் பாதுகாப்பு

சிரியாவில் அதிர்ச்சியூட்டும் வான்வழி தாக்குதல் !!

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இணையத்தில் தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிரியாவில் புரட்சிபடையினர் வசமுள்ள பகுதிகளை மீட்பதற்காக இராணுவத்தினர் வான்வழி தாக்குதல்களை நடத்துகின்றனர். இதில் நேற்று நடந்த

எகிப்தில் ரயில் விபத்து : 15 பேர் பலி !!

கெய்ரோ: எகிப்தில் ராணுவ ரயில் தடம் புரண்டு பயணம் செய்த 15 பேர் பலியானார்கள்.மேலும் 103 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவத்திற்கு சொந்தமான ரயில், கெய்ரோவிலிருந்து பக்கத்து ஊரான பத்ரஸினுக்கு சென்றபோது ரயில்

பலஸ்தீனர்களின் உடைமைகளை நிர்மூலமாக்கும் ஆக்கிரமிப்புப் படை !!


அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (14/01/2013) அல் ஹலீல் பிரதேசத்தின் யத்தா கிராமத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் குவிக்கப்பட்டன.ஆக்கிரமிப்புப் படையினர் யத்தா கிராமத்தில் இருந்த பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான உடைமைகளை நிர்மூலமாக்கும் நாசவேலையில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர்.  இதேவேளை, "உம் அல் ஹைர் பிரதேசத்துக்குள் திடீரென நுழைந்த ஆக்கிரமிப்பு இராணுவம், பலஸ்தீனர்களின் விலங்குப் பண்ணைகளையும், தானியக்

யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு:இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா !

ஹைதராபாத்:பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனைத்

January 14, 2013

RSS தலைவர் மோகன் பாகவத்தின் கனவு பலித்தால் என்ன நடக்கும் !

டெல்லி மாணவி கற்பழிக்கபட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பான விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. அது குறித்து RSS இயக்க தலைவர் மோகன் பாகவத் திருவாய் மலர்ந்துள்ளார். அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்;

பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!(புகைப்படங்கள்)


நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.

தமது நாட்டின் நீதித்துறையில் எவரும் தலையிடுவதை ஏற்கமுடியாது ! - சவுதி அரேபியா !!

ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. 

January 13, 2013

அதிரையில் களத்தில் இறங்கிய SDTU!


அதிரையில் தன் சேவையை தொடங்கியது SDTU என்னும் தொழிலாளர்களுக்கான தேசிய இயக்கம். இதில் ஒரு பகுதியாக நேற்று முந்தினம் ஆட்டோவில் பயணித்த ஒருவர் தன்னிடம் இருந்த பாஸ்புக் போன்ற முக்கிய ஆவணங்களை ஆட்டோவில் தவரவிட அதை பார்த்த டிரைவர் SDTU-வின் அமைப்பாளர் ஹிதாயதுல்லாஹ் அவர்களின் மூலம் இதை உரியவர்களிடம் சேர்க்கும் முயர்ச்சியில் இறங்கினர்.

January 12, 2013

கூட்டமைப்பு தலைவர்களிடம் கமலஹாசன் உறுதி

நடிகர் கமலஹாசன் தயாரித்து இயக்கி நடித்து வெளியாக உள்ள விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முஸ்லிம் சமுதாயத்தினரிடையே கடுமையான ஐய்யங்கல் ஏற்பட்டுள்ளனர்.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழ் நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு  மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இந்த விவகாரத்தை அணுகி வருகிறது. அதன் அடிப்படையில் நடிகர் கமலஹாசன் அவர்களை இரு முறை நேரில் சந்தித்து முஸ்லிம்

நூல் வெளியீட்டு விழாவில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் பங்கேற்பு!



சென்னை: விழிகள், அன்னை முத்தமிழ் பதிப்பகம் சார்பாக, "இந்துத்வா ஃபாசிசம், சாதி முறையைத் தகர்க்க இயலுமா, வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள், காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், ஒரு கம்யூனிஸ்டின் அரிய அனுபவங்கள் " ஆகிய 5 நூல்கள் வெளியீட்டு விழா 08.01.2013 அன்று மாலை 5 மணியளவில் எழும்பூர் பெரியார் திடலில் வைத்து நடைபெற்றது .

ஐக்கிய ஒப்பந்தம் உருவாக்க ஃபலஸ்தீன் தலைவர்கள் ஒப்புதல்!

கெய்ரோ: ஐக்கிய ஒப்பந்தம் உருவாக்க ஃபலஸ்தீனில் ஹமாஸ்-ஃபத்ஹ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதனை எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு உருவாக்கிய நல்லிணக்க ஐக்கிய ஒப்பந்தம் தொடர்பாக எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. ஃபலஸ்தீன்

கண்பார்வையை இழக்கும் நிலையில் உள்ளார் அப்துல் நாஸர் மஃதனி ! - மருத்துவ அறிக்கை !

பெங்களூர்: அவசர லேசர் சிகிட்சை அளிக்காவிட்டால் கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் கண்பார்வை முற்றிலும் இழந்துவிடும் என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. இடது கண்ணின் பார்வை திரும்ப கிடைக்காத அளவுக்கு இழந்துவிட்டதாகவும், வலது கண்ணின் பார்வை 80 சதவீதம் இழந்துவிட்டது என்றும் சவுகியா மருத்துவமனையில் மருத்துவ

உயர் நீதிமன்றம் – காவல்துறை ஆணையாளர் மோதல் முற்றுகிறது !

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நீதிமன்றத்தில் முன்னிலை ஆகாதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,  நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் முன்னிலை ஆகாமல் இருந்தால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தனியார் நிலம் விற்பனை
தொடர்பான வழக்கு விசாரணையின் போது,

சென்னை புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையாகும் இலக்கியசோலை புத்தகங்கள் !!

அரைகுறை ஆடையுடன் பெண்கள்: டெல்லியின் மறுமுகம் !

டெல்லியில் உள்ள "பப்" களில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு அங்கு வரும் பெண் கஸ்டமர்கள் தங்களது உடைகளை களைந்து உள்ளே அனுமதிக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குர்கானில் உள்ள சஹாரா ஷாப்பிங் மாலில் உள்ள இந்த பப்களில் சர்வ சாதரணமாக பெண்கள் வலம் வருவார்கள். இவர்களை இந்த பப்களே வேலைக்கு அமர்த்தியுள்ளது. இவர்களின் வேலை பப்களில் வலம் வந்து அங்கு வரும் வாடிகையாளர்களுடன் ஆடிப் பாடி அவர்களை மேலும் பணம் செலவழிக்க வைப்பதே

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில அலுவலக திறப்பு விழா !!

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில அலுவலகம் சென்னை மண்ணடியில் சுல்தான் தெருவில் திறக்கப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி.D.செய்யது இபுராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார் . மாநில பொதுச்செயலாளர் மௌலவி.A.ஆபிருதீன் மன்பஈ அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர்

எந்நேரத்திலும் போர் ஏற்படலாம்? சீனாவை தாக்க ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது ஜப்பான் !

சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடற்பகுதியில் உள்ள தீவுகள் தங்களுக்கு தான் சொந்தமென கூறி ஜப்பானும், சீனாவும் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதற்காக ஜப்பான் இராணுவம் போர் பயிற்சியை அதிகப்படுத்தி உள்ளது.

அமெரிக்க குழைந்தைகளுக்கு ஹிந்துத்துவத்தை புகுத்தும் யோகா : பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு !

கலிபோர்னியாவில் பள்ளியில் சொல்லித் தரும் யோகா வகுப்புகளில் இந்துத்துவத்தை சேர்த்து கற்பிப்பதாகக் குற்றம்சாட்டி சிலர் பெற்றோர்கள் அந்த வகுப்புகளை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள ஆலிவ்ஹெய்ன் பயனியர் துவக்கப்பள்ளியிலும்

இந்திய வீரர்களை பாக். ராணுவம் கொல்லவில்லை, 3வது நாடு விசாரிக்கட்டும்: ஹினா. . .

இஸ்லாமாபாத்: இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவம் கொல்லவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான், இந்தியாவுக்கு இடையேயான உறவை மேம்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் அரசு பாடுபாட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் அறிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

இலங்கைப் பணிப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் !

ரிசானாவின் குடும்பத்தார் 
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்ற றிசானா நபீக் என்பவருக்கு இன்று இலங்கை நேரம் காலை 11.40 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய