எட்டாவது
மாடியிலிருந்து விழுந்தும் எவ்வித பாதிப்புமின்றி 3 வயது சிறுவன் உயிர்
தப்பியுள்ள ஆச்சர்ய சம்பவம் உக்ரைனில் இடம் பெற்றுள்ளது. வடகிழக்கு உக்ரைன் நாட்டில் உக்ரைனியன் நகரில் இச்சிறுவன் வசித்து வருகிறான். அடுக்கு
மாடி குடியிறுப்பில் எட்டாவது மாடியில் தனது தயாருடன் வசித்து வரும் அந்த
சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னலை திறந்து எதிர்பாராத
விதமாக மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தான்.
அவனது
அதிர்ஷ்டம், ஜன்னலுக்கு நேர்கீழே, அவன் விழுந்த இடத்தில், மிருதுவான
பனிக்கட்டி குவியல் இருந்ததனால் காயங்களுடன் உயிரிழக்காமல், அந்த சிறுவன்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
சில சிராய்ப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவனது உடல்நிலை சீராக உள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே விழுந்த சிலர், அரிதாக உயிர் பிழைத்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
கடந்த
2008ம் ஆண்டு, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில், ஜன்னல் கண்ணாடியை
துடைக்கும்போது 47வது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிர்
பிழைத்தார்.
இதேபோல் சீனாவில் 2009ம் ஆண்டு 27வது மாடியின் ஜன்னல் வழியே கீழே விழுந்த 29வயது சீனப்பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
2010ம்
ஆண்டு 20வது மாடி ஜன்னல் வழியே தவறி விழுந்த 10 வயது சிறுவன், கீழே
நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அவன் காயங்களுடன் தப்பினான்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment