January 22, 2013

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் - கமிஷனரை சந்தித்தனர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள்




சென்னை : முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் 22.01.2013 அன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். கமிஷனர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளனர் .


இச்சந்திப்பின்போது இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தொண்டு அனீபா , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது , மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ருதீன் , SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் , வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா , சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ் , த.மு.மு.க மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி , INTJ மாநில தலைவர் S.M.பாக்கர் , மாநில துணைத்தலைவர் முனீர் அஹமது உட்பட இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்த பல தலைவர்கள் உடனிருந்தனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் பேட்டியளித்த போது


No comments:

Post a Comment